உலக செய்திகள்

உலகைச்சுற்றி...

இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா கலைத்திருப்பதற்கு, ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் கவலை தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

* இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா கலைத்திருப்பதற்கு ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கவலை தெரிவித்துள்ளார். ஜனநாயக செயல்முறைகளை மதிப்பதற்கும், கருத்து வேறுபாடுகளைக் களைவதற்கும்தான் மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

* சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் உள்ள டெயிர் அல் ஜோர் மாகாண பகுதிகளில் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதல்களில் 41 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் 17 பேர் ஒன்றுமறியாத அப்பாவி குழந்தைகள் என்பதுதான் நெஞ்சை நொறுக்கும் தகவல் ஆகும்.

* சோமாலியா நாட்டின் தலைநகரான மொகாதிசு நகர நட்சத்திர ஓட்டலையொட்டி நடந்த குண்டுவெடிப்புகள், துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி இருந்தன. இப்போது பலியானவர்கள் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.

* பாகிஸ்தானில் தலீபான்களின் மதிப்புக்குரியவராக திகழ்ந்து வந்த மத குரு மவுலானா சமியுல் ஹக் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

* ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை கத்திக்குத்து நடத்தி ஒருவரை கொன்றதுடன், 2 பேரை படுகாயம் அடையச்செய்தவரை. போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து விசாரணை நடத்தி வந்தனர். அவரது பெயர் ஹசன் காலிப் சிரே அலி; ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கொள்கைகளால் கவரப்பட்டு, அவர் இந்த சம்பவத்தை நடத்தி உள்ளார் என தெரிய வந்துள்ளது.


கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்