உலக செய்திகள்

உலகைச்சுற்றி...

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள இத்லிப் மாகாணத்தில், அல்தானா நகர சந்தையில் கார் குண்டு வெடித்தது. இதில் சிக்கி 10 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

தினத்தந்தி

* உள்நாட்டுப்போர் நடந்து வருகிற ஏமனில், உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் காலரா பரவி வருகிறது. 2 லட்சத்துக்கும் அதிகமானோரை காலரா தாக்கி உள்ளது. 1,300 பேர் இறந்துள்ளனர். காலரா மேலும் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஐ.நா. சபை ஈடுபட்டுள்ளது.

* அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு தொடர்பாக கடந்த நவம்பர் 8-ந் தேதிக்கு முன்னரே, ஒபாமாவுக்கு தெரியும். ஆனால் அவர் நடவடிக்கை எடுக்காமல் விட்டு விட்டார் என்று ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டி உள்ளார்.

* பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்நாட்டு சண்டை நடந்து வருகிற மாராவி நகரில், ரம்ஜான் பண்டிகையை மக்கள் கொண்டாடும் வகையில் நேற்று 8 மணி நேர சண்டை நிறுத்தத்தை ராணுவம் அறிவித்தது. காலை 6 மணிக்கு தொடங்கி இந்த சண்டை நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது.

* கொலம்பியாவில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

* கத்தார் நாட்டுக்கு துருக்கி அதிபர் எர்டோகன் தனது ஆதரவை பகிரங்கமாக தெரிவித்துள்ளார். கத்தாரில் உள்ள துருக்கியின் ராணுவ தளத்தை மூடுமாறு அரபு நாடுகள் கூறி இருப்பது அவமானகரமானது என அவர் கூறி உள்ளார்.

* இந்தோனேசியாவில் மெடான் நகரில் போலீஸ் அதிகாரி ஒருவர் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டார். இது பயங்கரவாத தாக்குதலாக கருதப்படுகிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்