உலக செய்திகள்

உலகைச்சுற்றி...

பனாமா நாட்டின் மேற்கு பகுதியில் லா எஸடபெரன்சா நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.

தினத்தந்தி


* பனாமா நாட்டின் மேற்கு பகுதியில் லா எஸடபெரன்சா நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* ஈராக்கின் கிர்குக் மாகாணத்தில் உள்ள அல் ராசாத் நகரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சாலையோரம் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டை ரிமோட் மூலம் பயங்கரவாதிகள் வெடிக்க செய்தனர். இதில் 5 போலீசார் உடல் சிதறி உயிர் இழந்தனர்.

* ஈரான் எந்த சூழ்நிலையிலும், எவ்வித நிபந்தனைகளின் பேரிலும் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து மறுபரிசீலனை செய்யாது என அந்நாட்டின் அதிபர் ஹசன் ருஹானி தெரிவித்தார்.

* ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள சிங்ளேடோன் நகரில் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 சிறுமிகள், ஒரு சிறுவன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்