உலக செய்திகள்

உலகைச்சுற்றி...

நேட்டோ படையில் இணைவது தொடர்பாக உக்ரைனில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

தினத்தந்தி


* ஏமன் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள துறைமுக நகரான ஏடனில் உள்ள விளையாட்டு மைதானத்தில் குழந்தைகளின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது, மர்ம நபர் ஒருவர் விளையாட்டு மைதானத்துக்குள் கையெறி வெடிகுண்டை வீசியதில் ஒரு குழந்தை பலியானது.

* நேட்டோ படையில் இணைவது தொடர்பாக உக்ரைனில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 53 சதவீத மக்கள் நேட்டோ படையில் இணைவதற்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர்.

* நேபாளத்தின் கைலாலி மற்றும் கஞ்சான்பூர் மாவட்டங்களில் பலத்த சூறாவளி தாக்கியது. இதில் அங்குள்ள பல்வேறு கிராமங்கள் சின்னபின்னமாகின. சூறாவளியில் சிக்கி ஒருவர் உயிர் இழந்தார். 37 பேர் காயம் அடைந்தனர்.

* நியூசிலாந்தின் காவ்கியா நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுக்கு, அங்கு தடை செய்யப்பட்ட தானியங்கி துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

* பிலிப்பைன்சில் போதை பழக்கத்துக்கு எதிரான போர் எனும் பெயரில் நடக்கும் சட்ட விரோத கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இதுதொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு