உலக செய்திகள்

அரசு அறிவிப்பை மீறினால் கைது; தாய்லாந்து பிரதமர் எச்சரிக்கை

அரசு அறிவிப்பை மீறினால் கைது செய்யப்படுவார்கள் என்று தாய்லாந்து பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தினத்தந்தி

பாங்காக்,

தாய்லாந்தில் கொரோனா பாதிப்பால் அந்நாட்டின் எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. மேலும், கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை பெருகிவிடக்கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் தாய்லாந்து செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அந்த நாட்டின் பிரதமர் பிரயூத் சான்-ஓ-சா, நேற்று தொலைக்காட்சி மூலம் மக்களுக்கு சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

அவர் பேசுகையில், கொரோனா தொற்று இருக்கும் என்று சந்தேகப்படுபவர்கள் தங்கள் பகுதிக்கு திரும்பக்கூடாது. மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளவேண்டும். மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். சோதனை மையங்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளது. நிலைமை மோசமானால், வீட்டைவிட்டு வெளியேற தடைச் சட்டம் அறிவிக்கப்படும். அரசின் அறிவிப்புகளை ஏற்று மக்கள் நடந்து கொள்ளவேண்டும். மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள். விலையை உயர்த்தும் வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு