உலக செய்திகள்

பெல்ஜியத்தில் 41 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது நிறுத்திவைப்பு

பெல்ஜியம் நாட்டில் ‘ஜான்சன்’ நிறுவனத்தின் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தினத்தந்தி

இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்ட 40 வயதுக்கு உட்பட்ட ஒரு பெண்ணுக்கு ரத்தம் உறைதல், ரத்த தட்டணுக்கள் குறைதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டன. இறுதியில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து, 41 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அந்த தடுப்பூசி போடுவதை பெல்ஜியம் அரசு நிறுத்தி வைத்துள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பின் மருந்து ஒழுங்குமுறை அமைப்பிடம் அவசர அறிவுரை கேட்டிருப்பதாகவும், அதன் அடிப்படையில் தடுப்பூசியை மீண்டும் போடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. அதே சமயத்தில், 41 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசி போடும் பணி நீடிக்கும் என்று கூறியுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்