உலக செய்திகள்

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் பில் கிளிண்டன்

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன், இன்று குணமடைந்து வீடு திரும்பினார்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனுக்கு, கொரோனா அல்லாத மற்றொரு வைரஸ் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு அவா கலிபோனியாவில் உள்ள இாவின் பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

75 வயதான பில் கிளிண்டன் உடல் நலம் தேறி வருவதாகவும் அவா மன உறுதியுடன் இருப்பதாகவும் அவரது செய்தித் தொடாபாளா ஏஞ்சல் உரேனா தெரிவித்திருந்தார். இதற்கிடையில் ஜனாதிபதி ஜோ பைடன், நேற்று பில் கிளிண்டனுடன் தொலைபேசியில் பேசி நலம் விசாரித்தார். அதோடு அவர் ஆஸ்பத்திரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பில் கிளிண்டனின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.

இது குறித்து ஜோ பைடன் கூறுகையில், பில் கிளிண்டன் நலமாக உள்ளார். அவருக்கு எந்த மோசமான உடல்நல பிரச்சினையும் இல்லை. விரைவில் அவர் வீடு திரும்புவார் என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் என்னிடம் தெரிவித்தது. அது நாளையா, நாளை மறுநாளா என்பது தெரியவில்லை என கூறினார்.

இந்த நிலையில் இன்று அமெரிக்க நேரப்படி காலை 8 மணிக்கு, பில் கிளிண்டன் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்ப்பினார். அவருடன் அவரது மனைவி ஹிலாரி கிளிண்டன் உடன் இருந்தார். பில் கிளிண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே, அவரது மனைவி ஹிலாரி உடன் இருந்து அவரை கவனித்து வந்தார். தற்போது பில் கிளிண்டன் பூரண நலத்துடன் இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவர்களின் ஆலோசனைகள் அவருக்கு வழங்கப்படும் என்றும் அவரது செய்தித் தொடாபாளா ஏஞ்சல் உரேனா தெரிவித்துள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்