உலக செய்திகள்

கோத்தபய ராஜபக்சேவுடன் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி சந்திப்பு

இலங்கைக்கு சென்றுள்ள பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து பேசியுள்ளார்.

தினத்தந்தி

கொழும்பு,

இந்தியாவின் அண்டை நாடுகளில் இன்றான இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், மக்கள் வெகுண்டெழுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து முதலில் மகிந்த ராஜபக்சே விலகினார். அடுத்த சில வாரங்களில் அதிபர் பொறுப்பில் இருந்து விலகிய கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டும் வெளியேறினார்.

இதையடுத்து  ரணில் விக்ரமசிங்கே அதிபராக பொறுப்பேற்றுள்ளார். இலங்கையில் இயல்பு நிலை சற்று திரும்ப தொடங்கியதும் வெளிநாட்டில் இருந்து கோத்தபய ராஜபக்சே திரும்பினார்.

இந்த நிலையில், இலங்கைக்கு சென்றுள்ள பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து பேசியுள்ளார். அதன்பிறகு மகிந்த ராஜபக்சே வீட்டிற்கு சென்ற சுப்பிரமணியன் சுவாமி, ராஜபக்சே வீட்டில் நடைபெற்ற நவராத்ரி பூஜையிலும் கலந்து கொண்டார். கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து விலகிய பிறகு சந்தித்த முதல் வெளிநாட்டு தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆவார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்