உலக செய்திகள்

கொலம்பியாவில் பாதுகாப்பு துறை மந்திரியின் வருகைக்கு முன்னர் குண்டுவெடிப்பு - போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி

கொலம்பியாவில் பாதுகாப்பு துறை மந்திரியின் வருகைக்கு முன்னர் நடந்த குண்டுவெடிப்பில், போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலியாகினர்.

தினத்தந்தி

பகோட்டா,

அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவின் வடக்கு சான்டாண்டர் மாகாணத்தில் உள்ள திபு நகரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் சென்ற ஜீப் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் அந்த ஜீப் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்துக் கொண்டு சிதறி ஓடினர்.

இதனையடுத்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் ஒரு போலீஸ்காரர் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 8 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொலம்பியாவின் பாதுகாப்பு துறை மந்திரி இவான் வெலாஸ்குவெஸ் திபு நகருக்கு செல்வதற்கு சற்று முன்னர் இந்த தாக்குதல் நடந்திருப்பது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

நாட்டின் மிகப்பெரிய கிளர்ச்சி குழுவான புரட்சிகர ஆயுதப்படையின் அதிருப்தியாளர்களும், தேசிய விடுதலைப்படையினரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு