உலக செய்திகள்

இஸ்ரேலில் குண்டுவெடிப்பு; ஒருவர் பலி: பயங்கரவாத தாக்குதலா? என விசாரணை

இஸ்ரேலில் குண்டுவெடிப்பில் உயிரிழந்த நபர் வெடிகுண்டு ஒன்றை சுமந்து சென்றிருக்க கூடும் என தளபதி பெரிட்ஜ் அமர் கூறியுள்ளார்.

தினத்தந்தி

டெல் அவிவ்,

இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரில் ஹலேஹி தெருவில் குண்டுவெடிப்பு ஒன்று நடந்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எனினும், அதில் பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். இதுபற்றி மாவட்ட தளபதி பெரிட்ஜ் அமர் கூறும்போது, உயிரிழந்த நபர் வெடிகுண்டு ஒன்றை சுமந்து சென்றிருக்க கூடும் என நம்பப்படுகிறது. குண்டுவெடிப்பில் பலியான நபர் யாரென போலீசார் இன்னும் அடையாளம் காணவில்லை என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதலா? என முழு விசாரணைக்கு முன்பே கூற முடியாது. எனினும், வெடிகுண்டால் இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது என அமர் உறுதிப்படுத்தி உள்ளார். அந்நபரை அடையாளம் காண்பது மிக முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்