மார்செலோ குயிரோகா, பிரேசில் புதிய சுகாதாரத்துறை மந்திரி 
உலக செய்திகள்

பிரேசிலில் 4-வது முறையாக சுகாதாரத்துறை மந்திரி மாற்றம்

கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் பிரேசில் உள்ளது.

தினத்தந்தி

அங்கு இதுவரை 1 கோடியே 15 லட்சத்து 25 ஆயிரத்து 477 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனா பலி எண்ணிக்கை 2 லட்சத்து 80 ஆயிரத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது.அதிபர் ஜெயிர் போல்சனரோ தலைமையிலான அரசு கொரோனா வைரசை முறையாக கையாளவில்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது.

இந்த நிலையில் பிரேசிலில் கொரோனா பரவ தொடங்கியதில் இருந்து 4-வது முறையாக சுகாதாரத்துறை மந்திரி மாற்றப்பட்டுள்ளார்.

ஜெயிர் போல்சனரோ அதிபராக பதவி ஏற்றது முதல் சுகாதார மந்திரியாக இருந்து வந்த லூயிஸ்ஹென்ரின் மாண்டெட்டா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக நெல்சன் டீச் புதிய சுகாதார மந்திரியாக நியமிக்கப்பட்டார். ஆனால் இவரும் சில வாரங்களிலேயே தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து ராணுவ ஜெனரல் எட்வர்டோ பசுவெல்லோ இடைக்கால சுகாதார மந்திரியாக நியமிக்கப்பட்டார். பின்னர் அந்த பதவிக்கு அவர் நிரந்தரமாக நியமிக்கப்பட்டார்.

மருத்துவத் துறையில் எந்த வித அனுபவம் இல்லாத ராணுவ ஜெனரலை சுகாதார மந்திரியாக நியமித்ததற்கு விமர்சனங்கள் எழுந்தன.இந்த நிலையில் பிரேசில் சுகாதாரத் துறைக்கு புதிய மந்திரியை நியமித்துள்ளதாக அதிபர் ஜெயீர் போல்சனரோ அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் எட்வர்டோ பசுவெல்லோ சுகாதாரத்துறை மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டு, டாக்டரும் இருதவியல் சங்கத்தின் தலைவருமான மார்செலோ குயிரோகா புதிய சுகாதாரத்துறை மந்திரியாக நியமிக்கப்படுகிறார் என்றார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்