உலக செய்திகள்

‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர்

பகுத்தறிவு மற்றும் ஆக்கபூர்வமான மாற்றத்திற்கான வலுவான குரலாக பிரிக்ஸ் அமைப்பு திகழ்கிறது என ஜெய்சங்கர் கூறினார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரிக்ஸ் அமைப்பு நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை மந்திரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

பன்முகத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படும்போது, பிரிக்ஸ் அமைப்பு, பகுத்தறிவு மற்றும் ஆக்கபூர்வமான மாற்றத்திற்கான வலுவான குரலாக உறுதியாக நிற்கிறது. அமைதி கட்டமைத்தல், உரையாடல், ராஜதந்திரம் மற்றும் சர்வதேச சட்டத்தை கடைபிடிப்பது ஆகியவற்றின் செய்தியை பிரிக்ஸ் நாடுகள் வலுப்படுத்த வேண்டும்.

அதிகரித்து வரும் பாதுகாப்புவாதம், வரி ஏற்ற இறக்கங்கள் மற்றும் தடைகள் ஆகியவை வர்த்தக ஒப்பந்தங்களை பாதிக்கும்போது, பிரிக்ஸ் நாடுகள் பலதரப்பு வர்த்தக முறையை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு