உலக செய்திகள்

தைவானை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விரும்பும் சீனா உக்ரைன் போரை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது: அமெரிக்கா

உக்ரைன் போரால் தைவானை ஆக்கிரமிக்க விரும்பும் சீனாவின் முடிவு ஆலோசனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

தைவானைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் சீனாவின் விருப்பப்படுகிறது. ஆனால், உக்ரைன் போரின் படிப்பினைகளை அறிந்ததால் சீனா இதுகுறித்து ஆலோசிக்கும் என்று அமெரிக்க உளவுத்துறை(சிஐஏ) இயக்குனராக இருக்கும் பில் பர்ன்ஸ் கூறினார்.

அமெரிக்க உளவுத்துறை(சிஐஏ) இயக்குனராக இருக்கும் பில் பர்ன்ஸ் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தைவான் பகுதியை, சீனாவின் ஒரு மாகாணமாக சீன அரசு பார்க்கிறது. அதேவேளையில், தைவானை சீனாவுடன் இணைக்கும் தனது இலக்கை சீன அதிபர் ஜி ஜின்பிங் பலவந்தமாக மாற்றிக்கொண்டார் என்று நான் நம்பவில்லை.

தைவானின் கட்டுப்பாட்டைப் பெற எப்படி, எப்போது முயற்சி செய்வது என்பது பற்றிய சீனாவின் கணக்கீட்டை உக்ரைனில் ஏற்பட்ட ரஷ்யாவின் அனுபவம் பாதிக்கும். அதிலும் குறிப்பாக, ரஷ்யாவின் மீது பொருளாதாரச் தடைகளைச் சுமத்துவதற்காக அட்லாண்டிக் நாடுகள் கூட்டமைப்பு ஒன்றிணைந்த விதத்தால் அவர்கள் ஒரு விதத்தில் தாக்கப்பட்டனர்.

புதின் செய்த செயல்கள், ஐரோப்பியர்களையும் அமெரிக்கர்களையும் மேலும் நெருக்கமாக்க வழிவகுத்தது. இந்த உண்மையை உணர்ந்துகொண்டதால் சீனா அமைதியற்ற நிலையில் உள்ளது.சீன தலைமை இதையெல்லாம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

தைவான் மீது சீனா கட்டுப்பாட்டைப் பெறுவதற்கு, தனது எந்தவொரு முயற்சியினையும் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய செலவுகள் மற்றும் பின்விளைவுகளை பற்றி சீன தலைமை கவனித்து வருகிறது.ரஷ்ய இராணுவப் படைகளின் மோசமான செயல்திறன் மற்றும் உக்ரேனிய சமூகத்தில் இருந்து வரும் கடுமையான எதிர்ப்பையும் கண்டு சீனா ஆச்சரியப்பட்டது.

படைகளை இன்னும் இரட்டிப்பாக்கினால் உக்ரைனில் முன்னேற முடியும் என்பதில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இப்போது உறுதியாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். போரில் ஏற்பட்ட எதிர்ப்பால் புதின் பின்வாங்கவில்லை. அவர் ஒரே மனநிலையில் இருக்கிறார்.

இவ்வாறு அமெரிக்க உளவுப்பிரிவுத் தலைவர் கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு