உலக செய்திகள்

நேபாள நாட்டுக்கு சீனா ரூ.5,600 கோடி நிதி உதவி - அதிபர் ஜின்பிங் அறிவிப்பு

நேபாளத்துக்கு அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.5,600 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என்று சீன அதிபர் ஜின்பிங் அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

காட்மாண்டு,

சீன நாட்டின் அதிபர் ஜின்பிங் இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் நேபாளத்துக்கு சென்றார். காட்மாண்டு விமான நிலையத்திற்கு அந்த நாட்டின் அதிபர் வித்யாதேவி பண்டாரி நேரில் வந்து, ஜின்பிங்கை வரவேற்றார்.

இது குறித்து ஜின்பிங் அவரிடம் கூறுகையில், நீங்கள் விமான நிலையத்துக்கு வந்து என்னை வரவேற்ற விதம் என்னை ஈர்த்தது என்று குறிப்பிட்டார்.

சீனாவுக்கும், நேபாளத்துக்கும் இடையே நட்பும், ஒத்துழைப்பும் மட்டுமே இருக்கிறது என்று நேபாள அதிபர் வித்யாதேவி பண்டாரி கூறியதை ஜின்பிங்கும் ஒப்புக்கொண்டார்.

நேபாளத்துக்கு அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.5,600 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என்று அதிபர் ஜின்பிங் அறிவித்தார்.

மேலும் நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒளி தலைமையிலான தூதுக்குழுவுடனும் சீன அதிபர் ஜின்பிங் பேச்சு நடத்தினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்