உலக செய்திகள்

சீனாவில் முதல் முறையாக வர்த்தக கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்துகள்

சீனாவில் முதல் முறையாக வர்த்தக கண்காட்சியில் கொரோனா தடுப்பூசி மருந்துகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

தினத்தந்தி

பீஜிங்,

உலகை ஆட்டிப்படைத்து வரும் உயிர்க்கொல்லி வைரசான கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றன.

ரஷியா, இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டு சோதனை நிலையில் உள்ளது. இந்த நிலையில் சீன தலைநகர் பீஜிங்கில் நடந்த வர்த்தக கண்காட்சியில் அந்நாட்டின் இரு நிறுவனங்களான சினோவக் பயோடெக் மற்றும் சினோபார்ம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி மருந்துகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசி மருந்துகள் இன்னும் பயன்பாட்டுக்கு வராத நிலையில் 3 கட்ட பரிசோதனைகள் முடிந்து இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு ஒப்புதல் கிடைத்து விடும் என அதன் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆண்டு ஒன்றுக்கு 30 கோடி தடுப்பூசி மருந்துகளை தயாரிக்கும் விதத்தில் தொழிற்சாலையை கட்டி முடித்துள்ளதாக சினோவக் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்