உலக செய்திகள்

சீன மீன்பிடிக் கப்பல் கவிழ்ந்து விபத்து: 39 பேர் மாயம் - தேடும் பணி தீவிரம்

இந்தியப் பெருங்கடலில் சீன மீன்பிடிக் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கப்பலில் இருந்த 39 பேர் மாயமாகியுள்ளனர்.

தினத்தந்தி

பெய்ஜிங்,

சீனாவின் ஆழ்கடல் மீன்பிடிக் கப்பல் ஒன்று மத்திய இந்தியப் பெருங்கடலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் (பெய்ஜிங் நேரம்) கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கப்பலில் இருந்த 39 பேர் மாயமாகியுள்ளனர்.

அவர்களில் 17 பேர் சீன பிரஜைகள், 17 பேர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் மேலும் 5 பேர் பிலிப்பைன்சை சேர்ந்தவர்களாகும். இதையடுத்து காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

முழு மீட்புப் பணிகளுக்கு உத்தரவிட்டுள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங், சர்வதேச கடல்சார் தேடல் மற்றும் மீட்பு உதவிகளை ஒருங்கிணைப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்