உலக செய்திகள்

கொரோனா தொற்றை கையாண்ட சீன அதிபரை விமர்சித்த தொழில் அதிபருக்கு 18 வருட சிறை

சீன அதிபர் ஜி ஜின்பிங் கொரோனா தொற்றை கையாண்டதை விமர்சித்த தொழில் அதிபருக்கு 18 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

பெய்ஜிங்

சீன் அதிபர் ஜி ஜின்பிங் கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கையாண்டதை விமர்சித்த சீன கோடீஸ்வரர் ஊழல் குற்றச்சாட்டில் 18 ஆண்டுகள் சிறை தண்டனை என்று சீன நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சீன மூத்த அதிகாரிகளுடன் நெருங்கிய உறவைக் கொண்ட ஓய்வுபெற்ற ரியல் எஸ்டேட் அதிபர் ரென் ஷிகியாங் மார்ச் மாதத்தில் திடீர் என மாயமானார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் கொரோனா தொற்றை கையாண்டதை விமர்சித்தவர் ரென் ஷிகியாங் . அதே மாதத்தில் ஒரு மோசமான கட்டுரை எழுதியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் மீது ஊழல் தொடர்பான குற்றங்கள் சுமத்தப்பட்டன.

செவ்வாயன்று, பெய்ஜிங்கில் உள்ள ஒரு நீதிமன்றம், பொது நிதியில் சுமார் 3 16.3 மில்லியன் (110.6 மில்லியன் யுவான்) மோசடி, லஞ்சம் வாங்குதல், மற்றும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளில் ரென் குற்றவாளி எனக் கண்டறிந்தது.

நீதிபதிகள் அவருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து 620,000 டாலர் (4.2 மில்லியன் யுவான்) அபராதம் விதித்தனர். நீதிமன்றம் "அவர் செய்த குற்றங்கள் அனைத்தையும் தானாக முன்வந்து ஒப்புக்கொண்டதாக கூறி உள்ளது.

69 வயதான ரென் பெரும்பாலும் சீன அரசியலைப் பற்றி வெளிப்படையாகப் பேசினார், பொதுவாக சர்வாதிகார அரசில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக பேசினார். அவரது நேர்மை அவருக்கு சீன சமூக ஊடகங்களில் "தி கேனான்" என்ற பெயரை பெற்றுத்தந்தது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது