உலக செய்திகள்

வங்காளதேசத்தில் புதிதாக 5,869 பேருக்கு கொரோனா

வங்காளதேசத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 7.97 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

டாக்கா,

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் வங்காளதேசம் 31-வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் வங்காளதேசத்தில் புதிதாக 5,869 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8.78 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், அங்கு வைரஸ் தாக்குதலுக்கு 108 பேர் பலியானதை தொடர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 976 ஆக உயர்ந்துள்ளது.

அதே சமயம் வங்காளதேசத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 7.97 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?