உலக செய்திகள்

எகிப்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்தது

எகிப்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்துள்ளது.

தினத்தந்தி

கெய்ரோ,

எகிப்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து எகிப்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் எகிப்தில் கடந்த 24 மணி நேரத்தில் 178 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து எகிப்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்து, 1 லட்சத்து 41 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 5, 541 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

எகிப்து தலைநகர் கெய்ரோவிலும், மற்றொரு முக்கிய நகரமான கிசாவிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனைத் தடுக்கும் நடவடிக்கையில் எகிப்து அரசு ஈடுபட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்