உலக செய்திகள்

அமீரகத்தில் புதிதாக 1,520 பேருக்கு கொரோனா

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட, 2 லட்சத்து 99 ஆயிரத்து 363 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகள் முடிவுகளில், 1,520 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 48 ஆயிரத்து 702 ஆக உயர்ந்தது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று ஒரு நாளில் 1,468 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 26 ஆயிரத்து 800 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று மட்டும் 7 பேர் பலியானார்கள். இதனால் அமீரகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,860 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 20 ஆயிரத்து 42 பேர் கொரோனா பாதிப்பின் காரணமாக பல்வேறு மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை நாட்டில் மொத்தம் 6 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு