உலக செய்திகள்

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 64 ஆயிரத்தை கடந்தது

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 64 ஆயிரத்தை கடந்துள்ளது.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் கொரோனா 24 மணி நேரத்துக்குள் 2,636 பேரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதனால் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் அங்கு புதிதாக 57 பேரின் உயிரையும் கொரோனா பறித்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 1,317 ஆக உயர்ந்துள்ளது. ரம்ஜான் பண்டிகையையொட்டி பாகிஸ்தானில் ஊரடங்கில் தளர்வு கொண்டுவரப்பட்டது. இதனாலேயே தற்போது அங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 227 பேர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்