உலக செய்திகள்

100 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி: இந்தியாவுக்கு, பில்கேட்ஸ் பாராட்டு

100 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்காக இந்தியாவுக்கு, பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

இந்தியா மற்றும் குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு பாதுகாப்பான மற்றும் மலிவு விலையில் தடுப்பூசி கிடைக்க உதவுவதற்காக இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்களுடன், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை இணைந்து பணியாற்றி வருகிறது.

இந்த அறக்கட்டளையின் இணைத் தலைவர் என்ற முறையில் பில்கேட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

140 கோடி மக்கள் தொகையை கொண்டுள்ள இந்தியா, முற்றிலும் மாறுபட்ட சுகாதார (கொரோனா வைரஸ் தொற்று) சவால்களை எதிர்கொள்ளும் வகையில் செயல்படும் திறமையை கண்டு பிரமிப்பு அடைந்தேன். தற்போது இந்தியா 100 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி மற்றொரு மைல்கல்லை எட்டி உள்ளது. இந்தியாவின் அனுபவத்தில் இருந்து மற்ற நாடுகள் பாடம் கற்றுக்கொள்ளலாம். இந்திய மக்கள் கொரோனா தடுப்பூசி திட்டத்தை வெற்றியாக்கி உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை