உலக செய்திகள்

ரஷியாவில் இந்த மாதம் கொரோனா தடுப்பூசி பரிசோதனை தொடங்குகிறது

ரஷியாவில் இந்த மாதம் கொரோனா தடுப்பூசி பரிசோதனை தொடங்க உள்ளது.

தினத்தந்தி

மாஸ்கோ,

உலகை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து பரிசோதனைகள் முடித்து சந்தைக்கு கொண்டு வருவதில் பல நாடுகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.

அந்த வகையில் ரஷியாவில் உள்ள பிரபல மருந்து நிறுவனங்களான பயோகாட் மற்றும் ஜெனிரியம் ஆகியவை கூட்டாக தடுப்பூசிகளை உருவாக்கி உள்ளன.

இந்த தடுப்பூசிகளை பரிசோதிப்பது இந்த மாதம் தொடங்கி விடும்.

இந்த தகவலை மாஸ்கோவில் நேற்று கொரோனா வைரஸ் தொற்று பதிலளிப்பு கவுன்சில் கூட்டத்தில் ரஷிய தொழில், வர்த்தக மந்திரி டெனிஸ் மாண்டுரோவ் கலந்து கொண்டு பேசும்போது தெரிவித்தார்.

இது அங்கு பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்