உலக செய்திகள்

கோவாக்சின் தடுப்பூசிக்கு ஐ.நா.சபையின் ஒப்புதல் கிடைக்குமா..?

கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக ஐ.நா சபையின் ஆலோசனை குழு அக்டோபர் 26ம் தேதி கூடுகிறது.

தினத்தந்தி

சுவிட்சர்லாந்து,

கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி வழங்குவது தொடர்பாக ஐ.நா சபையின் ஆலோசனை குழு அக்டோபர் 26ம் தேதி கூடுகிறது.

இதுகுறித்து ஐ.நா சபையின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் கூறியதாவது, ஐ.நா சபை கோவாக்சின் தடுப்பூசியுடன் மிக நெருக்கமாக பயணித்து வருகிறது. எங்கள் நோக்கம் அதிகமான தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்குவது. அதன்மூலம், அதிக மக்களுக்கு தடுப்பூசி கிடைக்க செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.

கடந்த செப்டம்பர் 27ம் தேதி கோவாக்சின் தரப்பில் கூடுதல் தரவுகள் அளிக்கப்பட்டது.ஐ.நா சபையின் நிபுணர்கள் அவற்றை ஆராய்ந்து வருகின்றனர்.அவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் அதில் விடைகள் இருப்பின் அடுத்த வாரம் இறுதி முடிவு கிடைக்கும் என்று ஐ.நா சபையின் டுவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

விரைவில் இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி கிடைக்கும் என்பது இதன்மூலம் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது