உலக செய்திகள்

கொரோனா நாசி ஸ்வாப் சோதனை: பெண்ணின் மூளையை துளைத்தது, மூக்கிலிருந்து மூளை திரவம் கசிந்தது

கொரோனா நாசி ஸ்வாப் சோதனையில் பெண்ணின் மூளையை துளைத்தது, மூக்கிலிருந்து மூளை திரவம் கசிந்தது

தினத்தந்தி

வாஷிங்டன்

உலகம் முழுவதும் கோரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், இன்னமும் ஓய்ந்த பாதிப்பு இல்லை. கொரோனாவை கண்டறிய ஆர்டி பிசிஆர் எனும் பரிசோதனை முறை தற்போது கையாளப்படுகிறது. மூக்கு மற்றும் வாய் வழியாக மாதிரிகள் எடுக்கப்படுகின்றன.

இந்த நிலையில்,அமெரிக்காவை சேர்ந்த 40 வயதான பெண் ஒருவருக்கு மூக்கு வழியாக மாதிரி எடுக்கும் போது, பரிசோதனை செய்தவரின் கவனக்குறைவால், அந்த குச்சியானது மிக வேகமாக மூளையின் சுற்றுப்புற அமைப்பை உடைத்துள்ளது.

இந்த பாதிப்பு காரணமாக மூளையை சுற்றியுள்ள திரவமானது மூக்கு வழியாக அந்த பெண்ணுக்கு ஒழுகத்தொடங்கியதாக மருத்துவர் ஒருவர் மருத்துவ ஆராய்ச்சி இதழில் விரிவாக எழுதியுள்ளார்.

இந்த விபத்தானது கொரோனா பரிசோதனை மேற்கொள்பவர்களுக்கு எச்சரிக்கை தரும் விதமான அமைந்துள்ளதாகவும் அந்த மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு