உலக செய்திகள்

சீனாவில் வெள்ள பாதிப்பு: பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு

சீனா தலைநகர் பீஜிங்கில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.

தினத்தந்தி

பீஜிங்,

டோக்சுரி சூறாவளி காரணமாக தென் சீனா கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பீஜிங்கிலும், ஹெபெய், தியான்ஜின் மற்றும் கிழக்கு ஷான்சியிலும் இடைவிடாமல் பெய்த மழையால் அனைத்து இடங்களிலும் நீர் தேங்கியுள்ளது.

முக்கிய ஆறுகளில் தண்ணீர் அபாய அளவை விட தாண்டி ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், பீஜிங் துணை மேயர் சியா லின்மாவோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், வெள்ளத்தில் சிக்கி, உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 18 பேர் மாயமாகி உள்ளனர்.

மேற்கில் தொடர்ந்து பெய்த கனமழைக்கு 59 ஆயிரம் வீடுகள் சரிந்து விழுந்துள்ளன. கிட்டத்தட்ட 1,50,000 பேரின் வீடுகள் சேதமடைந்துள்ளன. 37 ஆயிரம் ஏக்கர் பயிர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

100க்கும் மேற்பட்ட பாலங்கள் மற்றும் சாலைகள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சேதத்தின் அளவைக் கருத்தில் கொண்டு, முழு மீட்டெடுப்புக்கு சுமார் 3 ஆண்டுகள் வரை ஆகலாம்.  இவ்வாறு அவர் கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு