உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பதுங்கு குழிகள் அழிப்பு; 20 தலீபான் பயங்கரவாதிகள் சுட்டு கொலை

ஆப்கானிஸ்தானில் வான்வழி தாக்குதலில் 20 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

தினத்தந்தி

காபூல்,

ஆப்கானிஸ்தானில் கிழக்கு குணார் மாகாணத்தில் காஜி அபாத் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அந்நாட்டு ராணுவம் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது.

இதில், தலீபான் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகளை விமானத்தில் சென்று தாக்கி அழித்தனர். இந்த தாக்குதலில் 20 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 8 பயங்கரவாதிகள் காயமடைந்தனர் என ராணுவ வட்டாரம் வெளியிட்டு உள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.

நாட்டின் எந்த பகுதியிலும் உள்ள தலீபான் பயங்கரவாதிகளை இலக்காக கொண்டு பாதுகாப்பு படையினரின் தாக்குதல்கள் தொடரும் என்றும் அந்த அறிக்கை தெரிவித்து உள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்