உலக செய்திகள்

அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விடுவிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் செனட் சபையில் தோற்கடிக்கப்பட்டது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் தன் சொந்த அரசியல் ஆதாயத்திற்காக அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக பல்வேறு புகார்கள் கூறப்பட்டுள்ளன. குறிப்பாக எதிர்க்கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடனுக்கு எதிராக உக்ரைன் நாட்டில் சதி திட்டம் தீட்டுவதாகவும், உக்ரைன் அதிபரிடம் பிடனுக்கு எதிராக சதி செய்ய பேரம் பேசியதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து டிரம்ப் மீதான புகாரை விசாரிக்க பிரதிநிதிகள் சபை அனுமதி அளித்தது. அதன்படி விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்ததையடுத்து டிரம்பை பதவி நீக்கம் செய்வது தொடர்பாக பிரதிநிதிகள் சபையில், தகுதி நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, செனட் சபையில் டிரம்புக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடந்தது. செனட் சபையில், குடியரசுக்கட்சியினர் பெரும்பான்மை வகிப்பதால், இந்த தீர்மானம் எளிதாக தோற்கடிக்கப்பட்டது. 52-48, 53-47 என்ற வாக்குகளின் அடிப்படையில் பதவி நீக்க தீர்மானம் தோல்வி அடைந்தது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு