உலக செய்திகள்

பிரேசில் அதிபருடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவை சந்தித்து பேசினார்.

தினத்தந்தி

பிரேசிலியா,

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், பிரேசில் நாட்டிற்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ளார். பிரேசில் அதிபர் போல்சனாரோவை சந்தித்து இன்று பேசினார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அதிபர் ஜெய்ர் போல்சனாரோவை அழைப்பதில் பெருமை அடைகிறேன். பிரேசிலின் 200-வது ஆண்டு சுதந்திர தினத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அன்பான வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளுக்கு இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வழிகாட்டுதல்களுக்கு மதிப்பளித்தார். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, பிரேசில் தலைநகர் சிட்டி பார்க்கில் உள்ள காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார். பிரேசிலில் வாழும் இந்திய வம்சாவளியினரை சந்தித்து உரையாடினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு