நைபிடா
மியான்மர் நாட்டில், மணிப்பூர் எல்லையையொட்டிய பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 107 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக வெளிவரவில்லை.