உலக செய்திகள்

ஈராக்கில் துருக்கி ராணுவ தாக்குதலில் குர்து போராளிகள் 8 பேர் பலி

ஈராக்கில் துருக்கி ராணுவ தாக்குதலில் குர்து போராளிகள் 8 பேர் பலியாகினர்.

தினத்தந்தி

பாக்தாத்,

துருக்கி, ஈராக், ஈரான், சிரியா மற்றும் அர்மீனியா போன்ற நாடுகளின் எல்லைப் பகுதிகளில் மலைப்பாங்கான இடங்களில் வசிப்போர் தான் குர்துக்கள். குர்து மொழி பேசும் இவர்களுக்கென்று தனி நாடு கிடையாது. இவர்கள் குர்திஸ்தான் என்று அழைக்கப்படும் தாயகத்தை உருவாக்குவதற்கு பாடுபட்டு வருகிறார்கள்.

ஆனால் சிரியாவின் அண்டை நாடான துருக்கி குர்துகளை பயங்கரவாதிகளாக கருதுகிறது. எனவே ஈராக் மற்றும் சிரியா எல்லையில் உள்ள குர்து போராளிகளுக்கு எதிராக துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் ஈராக் எல்லையில் ஹாப்தியன் பிரந்தியத்தில் உள்ள குர்து போராளிகளின் நிலைகளை குறிவைத்து துருக்கி ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியது. இதில் குர்து போராளிகள் 8 பேர் கொல்லப்பட்டதாக துருக்கி ராணுவம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை