உலக செய்திகள்

டுவிட்டர் நிர்வாக குழுவில் இணைய எலான் மஸ்க் மறுப்பு

டுவிட்டர் நிர்வாக குழுவில் இணைய எலான் மஸ்க் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சான்பிரான்சிஸ்கோ,

உலகின் பெரும் பணக்காரரும் டெஸ்லா' ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை சமீபத்தில் வாங்கினார்.

டுவிட்டரில் குறைபாடுகள் இருப்பதாக கூறி அதற்கு மாற்றாக ஒரு புதிய சமூக வலைத்தளத்தை நிறுவ திட்டமிட்டுள்ளதாக எலான் மஸ்க் கடந்த மாதம் இறுதியில் கூறியிருந்த நிலையில், டுவிட்டர் நிறுவன பங்குகளை அவர் வாங்கினார். இதன்மூலம் எலான் மஸ்க் டுவிட்டர் நிர்வாக குழுவில் இணைந்து, டுவிட்டரில் சாத்தியமான மாற்றங்களை கொண்டுவர பரிந்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படியே எலான் மஸ்க் தங்கள் நிர்வாக குழுவில் இணைவார் என டுவிட்டர் நிறுவனம் கூறியிருந்தது. ஆனால், எலான் மஸ்க் அதை மறுத்துவிட்டார். டுவிட்டர் நிர்வாக குழுவில் இணைய தனக்கு விருப்பமில்லை என அவர் கூறிவிட்டார்.

இதுகுறித்து டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ஏப்ரல் 9-ந் தேதி முதல் அவர் நிர்வாக குழு உறுப்பினராக அதிகாரப்பூர்வமாக செயல்படவிருந்தார். ஆனால், அதே நாள் காலை, நிர்வாக குழுவில் இணைய போவதில்லை என அவர் பகிர்ந்து கொண்டார். இந்த முடிவு நல்லதுக்கு என நான் நம்புகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு