உலக செய்திகள்

எக்ஸ் செயலி மூலம் விரைவில் பண பரிமாற்றம் செய்யலாம்: எலான் மஸ்க் சொல்கிறார்

ட்விட்டர் தளத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

 உலக பெரும் பணக்காரரான   எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை கடந்த ஆண்டு விலைக்கு வாங்கினார். அதுமுதல் ஆட்குறைப்பு, எக்ஸ் என பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அந்தவகையில் தற்போது எக்ஸ் செயலியில் பண பரிமாற்றம் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று கூறியிருக்கிறார். 

இதுகுறித்து எலான் மஸ்க் நிருபர்களிடம் கூறுகையில், `எக்ஸ் செயலி மூலம் மற்றவர்களுக்கு பண பரிமாற்றம் செய்யும் உரிமம் பெற அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். இறுதி ஒப்புதல் வந்த பிறகு அடுத்த ஆண்டின் (2024) நடுப்பகுதியில் எக்ஸ் செயலி மூலம் பண பரிமாற்றம் செய்ய முடியும்' எனக் கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து