உலக செய்திகள்

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி அண்டனி பிளின்கனை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்காவுக்கு 5 நாட்கள் அரசு முறைப்பயணமாக சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி அண்டனி பிளின்கனை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின் போது கொரோனா நிவாரண பணிகள், இந்தோ- பசுபிக் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், பருவ நிலை மாறுபாடு விவகாரம், ஐநாபாதுகாப்பு கவுன்சில் விவகாரம் என பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தனர்.

இந்த சந்திப்புக்கு பிறகு அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி அண்டனி பிளின்கன் கூறுகையில், நமது காலத்தில் உள்ள பல்வேறு முக்கிய சவால்களான விவகாரத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயலாற்றுகின்றன. கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் நாங்கள் ஒருங்கிணைந்து பணியாற்றுகிறோம் என்றார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்