உலக செய்திகள்

மெட்டா நிறுவனத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதித்த ஐரோப்பிய ஒன்றியம்

மெட்டா நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் ரூ.10,761 கோடி அபராதம் விதித்துள்ளத்து.

தினத்தந்தி

பிரசல்ஸ்,

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவிடம் ஐரேப்பிய ஒன்றியத்துக்கான ஐரிஷ் டேட்டா புரடக்ஷன் கமிஷன் (டிபிசி) நடத்திய விசாரணையில், ஐரோப்பிய ஒன்றிய பயனாளர்களின் தகவல்களை பேஸ்புக் நிறுவனம் கடந்த 2020-ம் ஆண்டிலிருந்து அமெரிக்காவுக்கு வழங்கிவந்தது தெரியவந்தது.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை மீறி ஐரேப்பிய யூனியன் பயனாளர் டேட்டாவை அமெரிக்காவுக்கு அனுப்பியதற்காக ஐரேப்பிய டேட்டா புரடெக்ஷன் பேர்டு (இடிபிபி) மெட்டா நிர்வாகத்துக்கு ஒட்டுமெத்தமாக 1.2 பில்லியன் யூரே (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10,761 கேடி) அபராதம் விதித்துள்ளது.

இது குறித்து மெட்டா நிறுவனம் கூறுகையில், "ஐரேப்பிய யூனியனின் இந்த நடவடிக்கை நியாயமற்றது. முற்றிலும் குறைபாடுடையது. பிறநிறுவனங்களுக்கு ஆபத்தான முன்னுதாரணத்தை இது ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மெட்டா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது ஏமாற்றமளிக்கிறது" என்று தெரிவித்துள்ளது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை