உலக செய்திகள்

இங்கிலாந்திற்கு ஐரோப்பிய ஒன்றிய துணைத் தலைவர் எழுதிய ‘காதல் கடிதம்’

பிரெக்சிட் ஒப்பந்தம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய துணைத் தலைவர் இங்கிலாந்திற்கு ‘காதல் கடிதம்’ ஒன்றை எழுதியுள்ளார்.

பிரசல்ஸ்,

பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்தை வெளியேற்றுவதற்காக, போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தலைமையகத்தின் துணைத் தலைவர் ஃப்ரான்ஸ் டிமெர்மான்ஸ் இங்கிலாந்து அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எனது காதல் கடிதம்: குடும்ப உறவுகளை ஒருபோதும் துண்டிக்க முடியாது என்ற தலைப்பில் அந்த கடிதத்தை அவர் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது;-

இங்கிலாந்தை நான் மிகவும் விரும்புகிறேன். அது உங்களுக்கும் நன்றாக தெரியும். ஒரு பழைய காதலன் போல, உங்கள் பலம் மற்றும் பலவீனம் எல்லாவற்றையும் நான் அறிவேன்.

நீங்கள் இப்போது விலகிச் செல்ல முடிவு செய்திருக்கிறீர்கள். அது மிகவும் வேதனையளிப்பதாக இருந்தாலும், அந்த முடிவை நான் மதிக்கிறேன்.

நாங்கள் எங்கும் விலகிச் செல்லவில்லை. திரும்பி வருவதாக இருந்தால் நீங்கள் எப்போதும் வரவேற்கப்படுவீர்கள் என்று அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களால் பிரெக்ஸிட் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேற உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு