உலக செய்திகள்

2021ஆம் ஆண்டு இறுதி வரை கொரோனா பாதிப்பு நீடிக்கும் - அமெரிக்க மருத்துவ வல்லுனர் எச்சரிக்கை

2021ஆம் ஆண்டு இறுதி வரை கொரோனா பாதிப்பு நீடிக்கும் என்று அமெரிக்க மருத்துவ வல்லுனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தினத்தந்தி

நியூயார்க்,

2021ஆம் ஆண்டு இறுதி வரை கொரோனா பாதிப்பு நீடிக்கும் என்று அமெரிக்க மருத்துவ வல்லுனரான அந்தோனி பாவுசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தினமும் 40 ஆயிரம்பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். தினம்தோறும் ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முன்னர் நாம் இருந்த இயல்பு நிலைக்கு திரும்புவதை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள் என்றால் அது 2021-ம் ஆண்டுக்குள் இருக்கும். அல்லது 2021-ம் ஆண்டின் இறுதியில் கூட இருக்கலாம். என்னை அரசு நிர்வாகம் அமைதியாக இருக்கும்படி கூறும் தகவலில் உண்மை இல்லை என்று தெரிவித்தார்.

மேலும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாக அதிபர் டிரம்ப் கூறியதை அவர் மறுத்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா வைரசின் பாதிப்பு அதிகரித்தபடியே உள்ளது. அங்கு இதுவரை 66,76,601 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,98,128 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி இருக்கிறார்கள்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது