உலக செய்திகள்

தாய்லாந்தில் இரவு நேர மதுபான விடுதியில் பயங்கர தீ விபத்து; 13 பேர் உடல் கருகி பலி! 40க்கும் மேற்பட்டோர் படுகாயம்

தாய்லாந்தில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தினத்தந்தி

பாங்காக்,

தாய்லாந்தின் கிழக்கு மாகாணமான சோன்புரியில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

சத்தாஹிப் மாவட்டத்தில் உள்ள மவுண்டன் பி பப் என்ற இரவு நேர மதுபான விடுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் வெளிநாட்டினர் யாரும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீ விபத்து எற்பட்ட காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன. அதில், பலர் தங்கள் உடல்களில் தீக்காயங்களுடன் பப்பில் இருந்து அலறியடித்துக் கொண்டு ஓடும் காட்சிகள் உள்ளன.

தீயணைப்பு துறையினர் அங்கு சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். தீ விபத்துக்கான காரணம் சரியாக தெரியவில்லை.இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்