கோப்புப்படம் 
உலக செய்திகள்

துருக்கி: இஸ்தான்புல் நகரில் கடும் பனிப்பொழிவால் பல விமானங்கள் ரத்து

கடும் பனிப்பொழிவின் காரணமாக இஸ்தான்புல் விமானநிலையத்தில் பனி குவிந்து கானப்படுகிறது.

தினத்தந்தி

இஸ்தான்புல்,

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. ஒன்றரை கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நகரில் கடந்த வார இறுதியில் பனிப்பொழிவு தொடங்கி படிப்படியாக அதிகரித்தது.

கடும் பனிப்பொழிவின் காரணமாக இஸ்தான்புல் விமானநிலையத்தில் பனி குவிந்து கானப்படுகிறது. இதனால் அங்கு ஏராளமான விமானங்கள் இரண்டாவது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

பனியால், அங்கு போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 4,600 பேர் சாலைகளிலும் பிற இடங்களிலும் சிக்கித் தவிக்கின்றனர், ஆயிரக்கணக்கானோர் தற்காலிக வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டின் பேரிடர் மற்றும் அவசரகால ஆணையம் தெரிவித்துள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்