உலக செய்திகள்

காத்மாண்டுவில் இருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் திடீர் தீ

நேபாளம் காத்மாண்டுவில் இருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தினத்தந்தி

காத்மாண்டு,

நேபாளம் காத்மாண்டுவில் இருந்து துபாய் புறப்பட்ட பிளை துபாய் விமானம் 576 (போயிங் 737-800) விமானத்தில் புறப்பட்ட சில நிமிடங்களில் தீப்பிடித்தது. இதையடுத்து விமானத்தை அவசரகால அடிப்படையில் தரையிறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் தற்போது அந்த விமானம் துபாய் நோக்கி செல்வதாக நேபாளத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் நேபாளத்தின் சுற்றுலா அமைச்சர் சுதன் கிரார்தி விமானம் துபாய் நோக்கிச் செல்வதை உறுதிப்படுத்தியுள்ளார். விமானம் பத்திரமாக அதன் இலக்கை நோக்கி செல்வதாக அவர் கூறியுள்ளார்.

அந்த விமானத்தில் 50 நேபாள பயணிகள் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு