கோப்புப்படம் 
உலக செய்திகள்

4-வது டோஸ் தடுப்பூசி வலுவான நோய் எதிர்ப்புச்சக்தியை தரும் - ஆய்வு முடிவு

4-வது டோஸ் தடுப்பூசி வலுவான நோய் எதிர்ப்புச்சக்தியை தரும் என்று ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.

லண்டன்,

கொரோனாவுக்கு எதிராக 2 டோஸ் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. அதன் பின்னர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி ஒன்று போடப்படுகிறது. ஆனால் இங்கிலாந்தில் 3-வது பூஸ்டர் டோஸ் மட்டுமின்றி, வசந்த காலத்தையொட்டி 4-வது பூஸ்டர் டோசும் போடப்படுகிறது. இது அதிக பாதிப்புக்கு ஆளாகிற நிலையில் உள்ளவர்களுக்கு போடப்படுகிறது. அதிகளவு நோய் எதிர்ப்புச்சக்தியை பராமரிப்பதற்காக இந்த 4-வது டோஸ், முன் எச்சரிக்கை உத்தியாக அங்கு பின்பற்றப்படுகிறது.

இந்த நிலையில் 4-வது டோஸ் தடுப்பூசியாக (அதாவது, 2-வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக) பைசர் அல்லது மாடர்னா தடுப்பூசியை செலுத்திக்கொள்கிறபோது, அது வலுவான நோய் எதிர்ப்புச்சக்தியை தருகிறது என்பது நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுபற்றிய கூடுதல் தகவல்கள் தி லேன்செட் தொற்றுநோய் பத்திரிகையில் வெளியாகி உள்ளன.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு