உலக செய்திகள்

பயங்கரவாதிகளை எதிர்த்து போரிட ஆப்பிரிக்காவுக்கு கூடுதலாக பிரான்ஸ் படைகள்: அதிபர் மேக்ரான் தகவல்

பயங்கரவாதிகளை எதிர்த்து போரிட ஆப்பிரிக்காவுக்கு கூடுதலாக பிரான்ஸ் படைகளை அனுப்ப உள்ளதாக அதிபர் மேக்ரான் தகவல் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

பாரீஸ்,

ஆப்பிரிக்க நாடுகளில் மத அடிப்படையிலான பயங்கரவாத குழுக்கள் இயங்கி வருகின்றன. குறிப்பாக ஆப்பிரிக்காவின் சாஹல் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிற பயங்கரவாத குழுக்களை வீழ்த்துவதற்காக 2014-ம் ஆண்டு ஆபரேஷன் பார்கனே என்ற தாக்குதல் நடவடிக்கையை பிரான்ஸ், மாலி, புர்கினா பாசோ நாடுகள் தொடங்கின.

அங்கு 4,500 பிரான்ஸ் படை வீரர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் மேலும் 220 படை வீரர்களை சாஹல் பிராந்தியத்துக்கு அனுப்பி வைக்கப்போவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் கூறினார்.

இதுபற்றி அவர் கூறுகையில், எங்களுக்கு வேறு வழியில்லை. பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டு விட்டனர் என்ற முடிவு எங்களுக்கு தேவைப்படுகிறது. சாஹல் பிராந்தியத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் பங்களிப்பு தொடரும் என நம்புகிறேன் என்று குறிப்பிட்டார்.

நைஜர், மாலி, புர்கினா பாசோ, மவுரிடானியா, சாத் நாடுகளின் தலைவர்களை தென்மேற்கு பிரான்ஸ் நகரமான பாவ்வில் சந்தித்து பேசிய பின்னர் இந்த அறிவிப்பை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் வெளியிட்டார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்