கோப்புப்படம் 
உலக செய்திகள்

நைஜரில் உள்ள 1,500 ராணுவ வீரர்கள் வெளியேற்றம் - பிரான்ஸ் அதிபர் அறிவிப்பு

நைஜரில் உள்ள தங்கள் நாட்டு 1,500 ராணுவ வீரர்களை வெளியேற்றுவதாக பிரான்ஸ் அதிபர் அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

நியாமி,

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜர் முன்பு பிரான்ஸ் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் 1960-ம் ஆண்டு நைஜர் சுதந்திர நாடாக உருவானது. ஆனால் அங்கு பிரான்ஸ் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்தி வந்தது. அதன்படி அந்த நாட்டின் அதிபரான முகமது பாசும் பிரான்சுக்கு ஆதரவாக செயல்பட்டார். இதனால் அவரை ஆட்சியில் இருந்து அகற்றி கடந்த ஜூலை மாதம் அங்கு ராணுவ ஆட்சி கொண்டுவரப்பட்டது.

எனினும் பிரான்ஸ் நாட்டின் ராணுவ வீரர்கள் சுமார் 1,500 பேர் அங்கு நிலைநிறுத்தப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நைஜரில் உள்ள ராணுவ வீரர்கள் மற்றும் தூதரக அதிகாரிகளை அங்கிருந்து வெளியேற்றுவதாக அறிவித்துள்ளார். இதனை நைஜர் நாட்டின் ராணுவ ஆட்சிக்குழு வரவேற்றுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து