உலக செய்திகள்

ரோம் நகரின் ட்ரெவி நீரூற்றில் ஜி20 தலைவர்கள்

ஜி20 நாடுகளின் தலைவர்கள் ரோம் நகரில் உள்ள ட்ரெவி நீரூற்றுக்கு சென்றனர்.

தினத்தந்தி

ரோம்,

இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி20 அமைப்பின் உச்சிமாநாடு இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உள்பட ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் உள்ளிட்ட ஜி20 நாடுகளின் தலைவர்கள் ரோம் நகரில் உள்ள ட்ரெவி நீரூற்றுக்கு சென்றனர். அங்கு அவர்கள் அனைவரும் ஒன்றாக குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

பின்னர் அங்குள்ள பாரம்பரிய வழக்கப்படி, அவர்கள் தங்கள் தோள்களுக்கு பின்புறத்தில் இருந்து நாணயம் ஒன்றை நீரூற்றுக்குள் சுண்டிவிட்டனர். இவ்வாறு செய்வதன் மூலம் தாங்கள் மீண்டும் ரோம் நகருக்கு வருகை தருவோம் என்பதற்காக இத்தகைய வழக்கம் அங்கு கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்