உலக செய்திகள்

கொலம்பியாவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்தது: 20 தொழிலாளர்களின் கதி என்ன?

மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்

தினத்தந்தி

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் தங்கச் சுரங்கங்கள் அதிகம் உள்ளன. இங்குள்ள சுரங்கங்களில் ஆபத்தான முறையில் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு கடந்த ஆண்டு மட்டும் 6.6 டன் தங்கம் உற்பத்தி செய்யப்பட்டது.

அதே நேரத்தில், சட்டவிரோதமாக இயங்கி வரும் சில தங்கச் சுரங்கங்களில் விபத்துகளும் நிகழ்கின்றன. அந்த வகையில், வடக்கு கொலம்பியாவில் உள்ள ஒரு தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இடிபாடுகளில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். மீட்புப் படையினர், இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

சமீபத்தில் கொலம்பியாவில் ஒரு சட்டவிரோதச் சுரங்கத்தில் ஏழு சுரங்கத் தொழிலாளர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. 9 நாட்கள் போராடி உயிரிழந்த தொழிலாளர்களின் உடலை மீட்புக் குழு மீட்டெடுத்தது. இந்தச் சம்பவம் நடந்த சில வாரங்களில் மீண்டும் தங்கச் சுரங்கம் இடிந்து தொழிலாளர்கள் சிக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்