உலக செய்திகள்

ஆர்மேனியாவில் துப்பாக்கிச்சூடு - 3 பேர் பலி

ஆர்மேனியாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகினர்.

தினத்தந்தி

எரேவன்,

ஆர்மேனியா நாட்டில் உள்ள வனட்ஸார் நகரில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 11.55 மணிக்கு, அங்குள்ள வீடுகளில் மர்ம நபர் ஒருவர் புகுந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்திக்கொண்டிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றபோது அந்தப் பகுதி போர்க்களம் போல காணப்பட்டது. மக்கள் எல்லோரும் பதற்றத்தின் பிடியில் இருந்தனர்.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் குண்டு பாய்ந்து 3 பேர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததையும், 5 பேர் படுகாயம் அடைந்து விழுந்து கிடந்ததையும் போலீசார் கண்டனர்.

அவர்கள், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சுகளில் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் அதே நகரத்தை சேர்ந்த 40 வயதான ஒருவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

இந்த சம்பவத்துக்கான பின்னணி என்ன என்பது உடனடியாக தெரிய வரவில்லை.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை