உலக செய்திகள்

அமெரிக்காவில் ‘எச்-1 பி’ விசாக்களுக்கு 2-வது முறையாக குலுக்கல்; இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் மகிழ்ச்சி

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு ‘எச்-1 பி’ விசா வழங்கி வருகிறது. இந்த விசாவை உலக நாடுகளில் அதிக அளவு இந்தியர்களும், சீனர்களும்தான் பெற்று வருகின்றனர்.

தினத்தந்தி

குறிப்பாக ஐ.டி. என்றழைக்கப்படுகிற தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றுகிறவர்கள் மத்தியில் இந்த விசாவுக்கு தனி மவுசு உள்ளது. ஆண்டுக்கு, 85 ஆயிரம் எச்-1 பி விசா வழங்கப்படுகிறது. இதற்கு, 2.25 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பிக்கின்றனர். எனவே, குலுக்கல் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு விசா வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான எச்-1 பி விசா குலுக்கல் ஆண்டின் தொடக்கத்தில் நடந்து முடிந்தது. இந்தநிலையில் அரிதிலும் அரிதாக எச்-1 பி விசா விண்ணப்பதாரர்களுக்கான குலுக்கலை 2-வது முறையாக நடத்த அமெரிக்க குடியுரிமை துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் முகைமை வெளியிட்ட அறிக்கையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்பட்ட எச்-1 பி விசாக்களுக்கான கணினி மயமாக்கப்பட்ட குலுக்கல் நாடாளுமன்றத்தால் முடிவு செய்யப்பட்ட எச்-1 பி விசாக்களின் எண்ணிக்கையை பூர்த்தி செய்யவில்லை என்பதை தீர்மானித்த பிறகு 2-வது குலுக்கலை நடத்த முடிவு எடுக்கப்பட்டது என கூறப்பட்டுள்ளது.

இந்த 2-வது குலுக்கல் முதல் குலுக்கலில் தேர்வு ஆகாத பல விண்ணப்பதாரர்களுக்கு மற்றொரு வாய்ப்பை வழங்கியுள்ளது. இவர்களில் நூற்றுக்கணக்கான இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களும் அடங்குவர். இதனால் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு