கோப்புப்படம் 
உலக செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் ஹமாஸ் துணைத் தலைவர் பலி..!!

டிரோன் தாக்குதலில் ஹமாஸ் துணைத் தலைவர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பும் உறுதிப்படுத்தியுள்ளது.

தினத்தந்தி

பெய்ரூட்,

தெற்கு பெய்ரூட் புறநகர் பகுதியில் இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் ஹமாசின் துணைத் தலைவர் சலே அல் அரூரி கொல்லப்பட்டதாக லெபனானின் ஹிஸ்புல்லா குழு தெரிவித்துள்ளது. ஹமாசின் ராணுவப் பிரிவை நிறுவியவர்களில் சலே அரூரியும் ஒருவர். சலே அல்-அரூரியைக் கொன்றதை ஹமாஸ் பயங்கரவாத அமைப்பும் உறுதிப்படுத்தியுள்ளது.

முன்னதாக மேற்குக் கரையில் குழுவின் முன்னிலைக்கும் அவர் தலைமை தாங்கினார். இஸ்ரேல்-ஹமாஸ் போர் அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்குவதற்கு முன்பே இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவரைக் கொன்றுவிடுவதாக மிரட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது.

லெபனான் அரசு நடத்தும் தேசிய செய்தி நிறுவனம், இந்த குண்டுவெடிப்பில் நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், லெபனான் தலைநகரின் தெற்கு புறநகர்ப் பகுதியில் வெடிப்பு ஏற்பட்டதை அடுத்து இஸ்ரேலிய டிரோன் ஒன்று வெடித்து சிதறியதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்