உலக செய்திகள்

இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு

இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவியேற்றார்.

தினத்தந்தி

கொழும்பு,

கடந்த 14-ந் தேதி நடந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் அனுரா குமார திசநாயகாவின் கட்சி வரலாறு காணாத வெற்றி பெற்றது. இதையடுத்து, இலங்கையின் புதிய மந்திரிசபை இன்று பதவியேற்றது. அதிபர் செயலகத்தில் அதிபர் திசநாயகா முன்னிலையில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

இந்த நிலையில் இந்த பதவியேற்பு விழாவில் இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவியேற்றார். மேலும் அதிபர் திசநாயகா முன்னிலையில் புதிய அமைச்சரவையும் பதவியேற்றது. இதில் இலங்கையின் வெளிவிவகாரத் துறை மந்திரியாக விஜித ஹேரத் பதவியேற்றுக் கொண்டார். மகளிர் மற்றும் சிறுவர் நலத் துறை மந்திரியாக சரோஜா சாவித்திரி பால்ராஜ் பதவியேற்றார்.

கடற்தொழில் நீரியல் வழங்கல் மந்திரியாக ராமலிங்கம் சந்திரசேகரன் பதவியேற்றார். இலங்கையின் 10-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் 21-ந் தேதி தொடங்குகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்