உலக செய்திகள்

பிரான்சில் கடுமையான பனிப்பொழிவு - மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் 2 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின

பிரான்சின் தென்கிழக்கு பகுதியில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் 2 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன.


* பிரான்சின் தென்கிழக்கு பகுதியில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் சுமார் 2 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன.

* பொலிவியாவில் அதிபர் இவோ மோரலஸ் பதவி விலகிய பிறகு அந்த நாட்டின் புதிய வெளியுறவு மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ள கரென் லோங்காரிக், ஐ.நா. சபை மற்றும் கியூபா நாட்டுக்கான தூதர்கள் 2 பேரை பணியில் இருந்து நீக்கினார்.

* ஜனநாயக கட்சியினர் தனக்கு எதிராக நடத்தி வரும் பதவி நீக்க விசாரணை தனது குடும்பத்தினருக்கு கடுமையான வலிகளை கொடுத்திருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வேதனை தெரிவித்துள்ளார்.

* பாலஸ்தீனத்தின் காசா நகரில் அமல்படுத்தப்பட்ட சண்டை நிறுத்தத்தை மீறி பிஜேஜே பயங்கரவாத அமைப்புகளின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல் நடத்தியது.

* ரோஹிங்கியா முஸ்லிம்கள் சட்டவிரோதமாக மலேசியாவுக்கு செல்ல படகில் பயணித்த போது, அவர்களது படகு வங்காள விரிகுடா கடலில் கோளாறு ஏற்பட்டு நின்றது. மீனவர்கள் அளித்த தகவலின் பேரில் படகில் சிக்கியிருந்த 122 ரோஹிங்கியா முஸ்லிம்களை வங்காளதேச கடற்படையினர் மீட்டனர்.

SCROLL FOR NEXT